Posts

Showing posts from August, 2009

ராம பரதன்

முதியவரின் குரல்... முன்னுரை: காப்பியங்களும், இலக்கியங்களும் நமக்கு பல வாழ்க்கை நெறிகளையும், முன் உதாரணங்களையும் சொல்லித் தந்துள்ளன. இத்தகைய நெறிகளும், உதாரணங்களும் எக் கா லத்திற்கும் பொருந்தும். அப்படிப் பட்ட ஒரு கதையை தான் நாம் இன்று அலச இருக்கின்றோம். பொதுவாக அண்ணன் தம்பி பாசம் என்றால் ராம-லக்ஷ்மணன் என்று கூறுவார்கள். இக் கதையிலும் ஒரு அண்ணன் தம்பியை பற்றி சற்றே வித்தியாசமான கோணத்தில் பார்ப் போம். வாசகர்களே, ஒரு அழகான கதைக்கு தயாரா? வாருங்கள் பயணிப்போம்... கதை: ராம பரதன் சகோதரர்கள் ராம்-பரத், என்றால் தெப்பூர் - அண்ணாநகர் ஏரியாவில் பிரபலம். அண்ணாநகர் கூடை பந்துக் குழுவில் முக்கிய விளையாட்டு வீரர்கள். அண்ணன் ராம் மிகவும் பொறுமைசாலி. எந்த ஒரு விஷயத்தையும் நன்கு ஆராய்ந்து முடிவு செய்பவன். நேர்த்தியாக விளையாடக் கூடியவன், அந்தக் குழுவின் மிகப் பெரிய பலம மற்றும் அணித் தலைவன். தம்பி பரத் மிகவும் சுட்டி, யாரிடமும் மிக சுலபமாக பழகி விடுவான். விளையாட்டில் இவன் ஒரு குழு ஆட்டக்காரன் (team player). சரியாக குறி பார்த்து எரியத் தெரியாது என்றாலும், சூழ்நிலைக்கு தகுந்தவாறு பந்தை யாரிடம்...

ஏகலைவன்

பாபு அண்ணன் துபாயில் இருந்து வேலை நிமிர்த்தமாக சென்னை வருகிறார் என்ற செய்தி கேட்ட உடன் மோகன் மிகவும் பரவசம் ஆனான் . அவனது நினைவுகள் 10 ஆண்டுகள் பின் நோக்கிச் சென்றது . மோகன், பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டி ருந்தான் , அப்போது தான் பாபு வுடன் அவன் முதல் சந்திப்பு ஏற்பட்டது . அது பொங்கல் விடுமுறை. பொங்கல் கொண்டாடுவதற்காக மோகன் பாட்டி வீட்டுக்கு போவது வழக்கம் , அந்த ஆண்டும் சென்றான் . அங்கு தான் அவன் பாபுவை சந்தித்தான் . பாபு அவனுடைய அத்தை வழி தூரத்து உறவு . அந்த ஆண்டு பாபுவும் பொங்கல் கொண்டாடுவதற்காக அங்கு வந்திருந்தான் . பாபு, பார்த்த உடன் அனைவரையும் வசீகரிக்க வைக்கும் புன்னகை . பெரியவர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ளும் தன்மை . அவனது சகாக்களுடன் அவன் செய்யும் சில்மிஷம் என்று அப்போதே அங்குள்ள அனைவருடனும் நன்கு நெருங்கி விட்டான் . அன்று மாலை மோகன் அவனுடைய மாமன் மகன் , சித்தி மகன் , பெரியம்மா மகன் என்று தன்னுடைய சகாக்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான் . பாபு அவர்களுக்கு இடையில் நுழைந்தான். விடுகதை களுடன் ஆரம...