Posts

Showing posts from January, 2011

மனப் படிப்பி

இரண்டு வருட  முயற்சி  ஒரு வழியாக அந்தக் கருவியை உருவாக்கிவிட்டான் விஞ்ஞானி மோகன். ' மனப் படிப்பி ' அதுதான் அந்தக் கருவியின் பெயர். அதிகாலை நேரம் , உறக்கம் தெளிந்தும் தெளியாத தருணம் , கனவுலகும் நிஜ உலகும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருக்கும் தருணம். அந்த நேரத்தில் தான் உள்ளத்தில் உள்ள அனைத்து எண்ணங்களும் திமிறி கனவுலகை வதம் செய்துக் கொண்டிருக்கும். அந்த நேரத்தில் இந்தக் கருவியில் இருந்து வரும் அலைகளை ஒருவரின் மூளையில் இருந்து வரும் அலைகளுடன் இணைத்து விட்டால் போதும். அது அவர் மனதில் உள்ளதை படித்து எழுத்து வடிவில் குடுத்துவிடும்.   அந்தக் கருவியை பரிசோதிக்க நினைத்தான். அதற்க்கான சரியான தருணத்தை எதிர்பார்த்திருந்தான். அன்று   அதிகாலை 5:30 மணி , அலாரம் அடித்தது.மோகன் வேகமாக எழுந்து அலாரத்தை நிறுத்தினான். மாலுவின் தூக்கமும் லேசாக கலைந்தது. அவள் தூக்கத்தை மேலும் கலைக்காமல் , மெதுவாக மனப் படிப்பியை உயிர்ப்பித்தான். கருவியை மாலுவின் மூளையோடு இணைத்தான். திரையில் ஒவ்வொரு எழுத்துக்களாக காட்டத் துவங்கியது. ' நாளை , கல்யாணத்திற்கு பின் வருகிற என் மூன்றாம் பிறந்த நாள். இந்த வ...