சித்திரையில், நான்!
“அனைத்தும் மாறிவிடும் மணம் முடிந்த பிறகு ” , சொன்னார்கள் நண்பர்களும், உறவினர்களும், “நடக்கக் கூடும்?! ” நினைத்துக் கொண்டேன், 3 ஆண்டுகள் கடந்து போயின, எதுவும் மாறவில்லை. “ஏன்? ” எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். ஆர்வம அதிகரித்தது, “ஏன் அப்படிச் சொன்னார்கள்? ” என நினைத்து. “நான் வழக்கத்துக்கு மாறு பட்டவனா? ” யோசிக்கத் துவங்கி விட்டேன்! இதோ பதில் கிடைத்து விட்டது, அந்த விஷயம் அறிந்த மூன்றே மாதத்தில், நிறையவே மாறிவிட்டேன், ஒவ்வொரு கணமும், மாற்றிக் கொண்டே இருக்கிறேன், என்னை மேம்படுத்திக் கொள்ள, கண்டிப்பாக முற்றிலும் மாறுபட்டவனாகி இருப்பேன், வரும் சித்திரை மாதம் முதல் முறையாக, எங்கள் குழந்தை, இவ்வுலகை காணும் போது! ~ மதன் தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும். ~குறள்