Posts

Showing posts from June, 2011

மழை!!!

Image
ஊரெல்லாம் ஒரே பஞ்சம்  கரு மேகங்கள் கருணையே இன்றி விலகிச் சென்றது பல ஆண்டுகள் கடந்து போயின இதோ வந்து விட்டது நேற்று பெய்த மழையால் ஊரெல்லாம் ஒரே வெள்ளம் இது போதும், காத்துக் கொள்வோம் இனி சில ஆண்டுகளுக்கு பஞ்சம் இல்லை அம்மா, ஒரு நாள் மழையாக இந்த சில நாட்களுக்கு நன்றி! ~மதன் பதிமூன்று ஆண்டுகளில் முதல் முறையாக என் அம்மா, என்னோடு வந்து சில நாட்கள் தங்கியதை நினைவு கூறி, நன்றி பாராட்டும் கவிதை.